Posts

15 - வ.உ.சிதம்பரம் பிள்ளை (வ உ சி)

வ.உ.சி. என்று அறியப்படும்.. வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை, 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள் தமிழ்நாட்டில்,  தூத்துக்குடி மாவட்டம்.ஒட்டப்பிடாரம்  என்ற ஊரில் சைவ வெள்ளாளர்  மரபில் உலகநாத பிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார் . வ. உ. சி. யின் திருமணம் 1895 ஆம் ஆண்டு வள்ளி அம்மையார் உடன் நடைபெற்றது. வள்ளி அம்மையார் 1900 ஆம் ஆண்டு தலை பிரசவத்தில் இறந்து விட்டார். பின்னர் வ. உ. சிதம்பரத்தின் திருமணம் மீனாட்சி அம்மாளுடன் 8 செப்டம்பர் 1901 அன்று தூத்துக்குடியில் நடந்தது. வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார். இவரது அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. அவர் அன்பு, தைரியம், வெளிப்படையான குணம் இவற்றை உடையவராக இருந்தார். தமிழ் மொழியில் உள்ள அநேக இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றி கட்டுரைகளையும், செய்யுள்களையும் எழுதியுள்ளார்,ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார். வி

13 - செய்குத்தம்பி பாவலர்

Image
சதாவஹானி செய்குதம்பி பாவலர்,  நாஞ்சில் நாட்டு கோட்டாறு பகுதியில் இடலாக்குடியில் அமீனா அம்மையாருக்கும் பக்கீர் மீரான் சாகிபுக்கும்மூன்றாவது மகனாக 1874 ஜூலை 31இல் பிறந்தார். அக்காலத்தில் திருவிதாங்கூர் மன்னர் மன்னர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாஞ்சில் நாட்டில் மலையாளப் பள்ளிகளே நடந்து வந்தன. பிற்காலத்தில் மிகச் சிறந்த தமிழ்ப் புலவராக விளங்கிய செய்குதம்பி இம்மலையாள மொழிப் பள்ளியில் படித்துத் தேர்ந்தது வியப்புக்குரியது. இவர் சிந்தனை தமிழ்மேலேயே இருந்தது. இடலாக்குடியை அடுத்த பட்டாரியார் வீதியில் சங்கரநாராயண அண்ணாவி என்பவரிடம் முறையாகத்தமிழ் கற்றார். இலக்கண இலக்கியங்களில் தேர்ச்சியுற்றார். காளமேகப் புலவர்,மாம்பழக்கவிச்சிங்க பாவலர் போல அந்தாதியாகவும்,சிலேடையாகவும்,யமகம்,திரிபுகளாகவும் கவிபுனையும் கலை கைவரப் பெற்றார். சீறாப்புராணத்திற்குச் சிறந்ததோர் உரையெழுதியவர்.கோட்டாற்றுப்பிள்ளைத்தமிழ்,அழகப்பாக் கோவை முதலிய சிற்றிலக்கிய நூல்களையும், சில நாடக நூல்களையும் எழுதியவர் ஆவார். கூர்த்தமதி படைத்து விளங்கியதால் ஒரே சமயத்தில் நூறு வகையான செயல்கள் செய்யும் சதாவதானம் எனும் கலையில் சிறந்து வி

12 - வீரமாமுனிவர்

Image
இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் எனும் இடத்தில் பிறந்த இவரின் இயற் பெயர் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி ஆகும். கிறிஸ்துவ மதத்தைப் பரப்பும் நோக்கில் 1709 ஆம் ஆண்டு தமிழகம் வந்தார். சிலகாலம் கோவாவில் தங்கியவர், தமிழ்நாடுவர திட்டமிட்டு கொச்சி வந்து அங்கிருந்து கால்நடையாகவே  அம்பலக்காடு வந்து,மதுரையில் காமநாயக்கன் பட்டி வந்து சேற்ந்தார். மறை பரப்பு முயற்சிக்காக முதலில் தமிழைக் கற்றுக்கொண்ட இவர், தமிழில் வியத்தகு புலமை பெற்று இலக்கணம், இலக்கியம், அகராதி படைத்து தமிழுக்குச் செழுமையூட்டினார். தமது பெயரினை  தைரியநாதசாமி  என்று முதலில் மாற்றிக் கொண்டார். பின்னர், அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும், தமது இயற்பெயரின் பொருளைத் தழுவி, செந்தமிழில்  வீரமாமுனிவர்  என மாற்றிக் கொண்டார் இவர் தமிழகம் வந்தபின், சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியம் கற்று, இலக்கியப் பேருரைகள் நடத்துமளவுக்குப் புலமை பெற்றார். இலக்கியச் சுவடிகளைப் பல இடங்கள் சென்று தேடி எடுத்ததால்; "சுவடி தேடும் சாமியார்" எனவும் அழைக்கப்பட்டார். இவற்றில் காண அரிதான பல பொக்கிஷங்கள் அழி

11 - கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

Image
தேசிக விநாயகம் பிள்ளை 1876ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் நாள் பிற்ந்தார் சிவதாணுப்பிள்ளை -ஆதிலட்சுமி தம்பதியர்க்கு இரண்டு பெண் குழந்தைகளை அடுத்து மூன்றாவதாக தேசிக விநாயகம் பிறந்தார். இரண்டு பெண்களுக்கு பின் பிறந்த ஆண் மகவுக்கு தான் வணங்கும் தேசிக விநாயகரின் பெயரை வைத்தார் சிவதாணுப்பிள்ளை. ஒன்பதாவது வயதில் தன் தந்தையை இழந்தார். எம். ஏ. படித்த கவிமணி பின் ஆசிரியர் பயிற்சி படித்து தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார். உமையம்மை எனும் பெண்ணை 1901ஆம் ஆடு மணம் முடித்தார். இவர் ஒரு புகழ் பெற்ற கவிஞர்.பக்தி பாடல்கள்,வரலாற்று நோக்குடைய கவிதைகள்,இலக்கியம் பற்றிய பாடல்கள்,இயற்கைப் பாடல்கள்,குழந்தைப் பாடல்கள்,வாழ்வியல் போராட்ட கவிதைகள்,சமூகப் பாடல்கள்,தேசியப் பாட்டுகள்,வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள்,பல்சுவைப் பாக்கல் என அனைத்து பாடல்களையும் இயற்றியவர். நாகர்கோவிலிலுள்ள கோட்டார் ஆரம்பப்பள்ளி, நாகர்கோவில் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி மற்றும் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரி போன்றவற்றில் ஆசிரியராக 36 ஆண்டுகள் பணிபுரிந்தார். தமிழில் குழந்தைகளுக்காக முதன்முதலில் தொடர்ச்சியாகப் பாடல்களை

10 - பரிதிமாற் கலைஞர்

Image
மதுரை அருகே விளாச்சேரி ஊராட்சி எனும் ஊரில் கோவிந்த சிவன், இலட்சுமி அம்மாள் தம்பதியர்க்கு 1870ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6ஆம் நாள் மகனாக இவர் பிறந்தார். இயற்பெயர் சூரியநாராயணன். தந்தையிடம் சமஸ்கிருதமும், மதுரை சபாபதி முதலியாரிடம் தமிழும் கற்றார். மதுரை உயர்நிலைப் பள்ளியில் பயின்றார் இவர்,ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார். இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை சான்றவர். 'தமிழ் மொழி வரலாறு' போன்ற ஆய்வு நூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக நூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும் இயற்றியவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர்  சூரியநாராயணன்  என்பது. பின்னாளில்  சூரியநாராயண சாஸ்திரியர்  என்று அழைக்கப்பட்ட இவர், தமிழ் மேல் கொண்ட பற்றினால் தனது பெயரை வடமொழி கலக்காத தூய தமிழில்  பரிதிமாற் கலைஞர்  என்று மாற்றிக்கொண்டார். இளவயது முதலே தமிழ் மொழியின் மீதும் இலக்கணத்தின் மீதும், இலக்கியத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர் பின்னாளில் இளங்கலை பட்டப்படிப்பில் தம

9 - பூண்டி அரங்கநாத முதலியார்

Image
அரங்கநாத முதலியார் 1837ஆம்  பூண்டியில் பிறந்தார்.எனவே பூண்டி அரங்கநாத முதலியார் என அழைக்கப்பட்டார். கணிதத்தில்  கலை முதுவர் பட்டம் (Master of Arts in Mathematics) பெற்றார். பெல்லாரி மாவட்டப் பள்ளி (Bellary Provincial School), கும்பகோணம் கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி ஆகியவற்றில் கணிதப் பேராசிரியராகவும் சென்னை மாகாண நிர்வாகத்தால் ஏற்பளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். உ.வே சா அவர்கள், தனது பல நூல்கள் பதிப்பித்து வர அரங்கநாத முதலியார், பல விதங்களிலும் உதவியதாக தனது "என் சரித்திரம்" என்ற நூலில் கூறியுள்ளார். இவர் நகைச்சுவையாகப் பேசுவதிலும் வல்லவராய்த் திகழ்ந்தார். ஒருமுறை நீதிபதி முத்துசாமி ஐயர் ,இவரைப் பார்த்த போது தன்னிடமிருந்த  தடியைக் கையில் தொங்கவிட்ட படியே, "அடியேன் வணக்கம்" என்று அரங்கநாதருக்கு வணக்கம் சொன்னாராம். பதிலுக்கு முதலியார், கைகளைக் கூப்பி வணக்கம் சொன்னதோடு."அடியேன் எனில் கையில் தடி எதற்கு?" என்றாராம். இதைக்கேட்ட முத்துசாமி ஐயர் உட்பட அனைவரும் சிரித்து மகிழ்ந்தார்களாம்.  ஆங்கில அரசாங்கத்திடம் திவ

8 - மறைமலை அடிகள்

Image
மறைமலை அடிகளின் இயற்பெயர் வேதாசலம்.1876ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் நாள் திருக்கழுக்குன்றத்தில் பிறந்தார் புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர்.  இவர் தந்தையார் சொக்கநாதபிள்ளை, தாயார் சின்னம்மையார். தந்தையார் நாகப்பட்டினத்தில் அறுவை மருத்துவராய் பணியாற்றி வந்தார். பல்லாண்டுகள் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்து திருக்கழுக்குன்றம் சிவன் வேதாசலரையும் , அம்மை சொக்கம்மையையும் வேண்டி நோன்பிருந்து பிள்ளைப்பேறு பெற்றதால், தம் பிள்ளைக்கு வேதாசலம் என்று பெயரிட்டார். பின்னர்த் தனித்தமிழ்ப்பற்று காரணமாக 1916-ல் தம் பெயரை மறைமலை (வேதம் = மறை, அசலம் = மலை) என்று மாற்றிக்கொண்டார். அவர் தம்முடை பிள்ளைகள் திருநாவுக்கரசு, நீலாம்பிகை தவிர மற்றவர்களின் வடமொழிப்பெயர்களைத், திருஞான சம்பந்தம்: அறிவுத்தொடர்பு, மாணிக்க வாசகம் : மணிமொழி, சுந்தரமூர்த்தி: அழகுரு, , திரிபுரசுந்தரி : முந்நகரழகி எனத் தனித்தமிழாக்கினார். தன்னுடன் சிறுவயது முதல் பழகிய செளந்திர வள்ளியம்மை என்ற பெண்ணை, மிகவும் இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 7 குழந்தைகள் பிறந்